மீண்டும் மீண்டுமா .., விமல் மீது மற்றொரு தயாரிப்பாளர் புகார்..!

Published by
Rebekal

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் விமல் மீது ஏற்கனவே தயாரிப்பாளர் கோபி என்பவர் மன்னார் வகையறா படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்ததார். ஆனால்,  இந்த குற்றசாட்டை நடிகர் விமல் முற்றிலுமாக மறுத்த நிலையில் தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் சிங்கார வேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் 2016-ம் ஆண்டு தனக்கு விமல் அறிமுகமாகியதாகவும், அதன் பின்பாக மன்னர் வகையறா படத்தை திருப்பூரை சேர்ந்த கணேசன் என்பவர் மூலமாக தயாரிக்க உள்ளதாகவும் அதற்காக பண உதவி செய்யுமாறும் வந்ததாகவும் அப்பொழுதுதான் கோபி எனும் தனது நண்பரிடம் ஐந்து கோடி ரூபாயை வாங்கிக் கொடுத்ததாகவும், அதன் பின் மீண்டும் தன்னிடம் வந்த விமல் களவாணி 2 படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக 1.50 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டதாகவும் தான் அதை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த படத்திற்கான தயாரிப்பு பணி அவர் தொடராததால், பட வெளியீட்டுக்கு முன்பாகவே பணத்தை கொடுத்து விடுகிறேன் என விமல் கூறியிருந்தார். அப்படியும் கொடுக்காததால் அரசியல் பிரபலத்தை அழைத்து எனக்கு தரவேண்டிய பணத்தைத் தந்து விடுவதாகவும்,  இருவரும் ஆவணத்தில் கையெழுத்திட்டதாகவும், ஆனால் இரண்டு வருடங்களாகியும் இன்னும் விமல் அந்த 1.50 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்துவிட்டார் என அவர் புகார் அளித்துள்ளார்  .

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago