இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார்.
நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை காயத்ரி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநாதன் இசையமைத்து வருகிறார். ஆக்சன் கதைக்களமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறு விறுவென நடந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நடிகை சரண்யா பொன்வண்ணன் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான “தென்மேற்கு “நீர்ப்பறவை”, “பருவக்காற்று” ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…