பாரிஸ் நகரில் புகழ்பெற்ற ஓர்சே ( Orsay museum ) அருங்காட்சியகம் தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது.
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சுற்றுலா தளங்கள் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடின. அங்கு பராமரிக்க ஆள் இன்று பூட்டப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு கொஞ்சம் குறைந்து வரும் நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பிரான்சு நாட்டில் கடந்த மே மாதம் பாதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பாரிஸ் நகரில் புகழ்பெற்ற ஓர்சே ( Orsay museum ) அருங்காட்சியகம் தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது.
இந்த அருங்காட்சியகம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டப்பட்டிருந்தது. இந்த அருங்காட்சியகத்திற்க கோடை விடுமுறை காலத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து செல்வார்களாம். ஆனால், தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரமுடியாத காரணத்தால் ஒரு நாளைக்கு 5000 பார்வையாளர்கள் மட்டுமே வந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்த அருங்காட்சியக தலைவர் அரசாங்கத்திடம் அருங்காட்சியகத்தை பராமரிக்க உதவி கோரியுள்ளார்.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…