ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஐநா மனித உரிமை அவசர கூட்டம் நடைபெறுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும்,அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து நிலையில்,தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.இதனால்,உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்தன.மேலும்,ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள் மீது தாலிபன் ஆட்சியின் தாக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில்,ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில், “ஆப்கானிஸ்தானில் தீவிர மனித உரிமைகள் கவலைகள் மற்றும் சூழ்நிலைகள்” என்ற தலைப்பில் சிறப்பு அமர்வை நடத்துகிறது.
பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் & யுகே உட்பட 60 நாடுகளின் ஆதரவுடன் இந்த அமர்வு கூட்டப்படுகிறது.இதில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் காணொலி வாயிலாக உரையாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…