பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறி விட கூடாது – ஐநா பாதுகாப்பு கவுன்சில்!

Default Image

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட கூடாது என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். இந்நிலையில், நேற்று அமெரிக்க ராணுவம் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. மேலும் தாங்கள் வெளியேறிவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் எனவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதன் படி எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தவோ, அல்லது தாக்குதல் நடத்துவதற்கோ ஆப்கானிஸ்தானை பிற நாடுகள் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் புகலிடம் அளிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பக்கூடிய நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்களை ஒழுங்கான முறையில் வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Imran khan
IPL 2025 - Rohit sharma
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan