ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் ரோகுல்லா சலே தாலிபான்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அப்பொழுது துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.
மேலும், அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலிபான்களுக்கும் எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரனான ரோகுல்லா சலேயை தலிபான்கள் சிறை பிடித்ததாகவும், ஆனால் அவரைச் சித்திரவதை செய்து கொலை செய்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…