சந்திராயன்- 2 தொடர்ந்து அடுத்து சூரியனில் ஆதித்யா எல்-1 இஸ்ரோ அதிரடி !

Published by
murugan

இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆய்வு செய்ய கடந்த 2008 -ஆம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. சந்திராயன் 1 விண்கலம் 312 நாட்கள் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரோ நிறுவனம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலத்தை செயல்படுத்த முடிவு செய்தது.

இதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக  நடைபெற்று வந்தது.இறுதியாக சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15- ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தது.

ஆனால் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால். பின்னர் ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து அந்த தொழில் நுட்ப கோளாறை இஸ்ரோ சரிசெய்து நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில் சந்திராயன்- 2 தொடர்ந்து சூரியனின் வெளிபரப்பை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப  இஸ்ரோ முடிவு செய்து உள்ளது. 2020-ம் ஆண்டு முதல் ஆறு மாதத்திற்குள் ஆதித்யா எல்-1  என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புவதே அடுத்த கட்ட திட்டம் என கூறியுள்ளது.

15 லட்சம் கீ.மீ தூரத்தில் உள்ள சூரியனின் வெளிபரப்பை ஆய்வு செய்யவதால் அதன் மூலம் பூமியின் சுற்று சூழல் மாறுபாட்டை கண்காணிக்க முடியும் என இஸ்ரோ நிறுவனம் கூறி உள்ளது.

Published by
murugan

Recent Posts

“தெர்மாகோல்., தெர்மாகோல்., என ஓட்டுகின்றனர்!” செல்லூர் ராஜு வருத்தம்! 

“தெர்மாகோல்., தெர்மாகோல்., என ஓட்டுகின்றனர்!” செல்லூர் ராஜு வருத்தம்!

சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…

39 seconds ago

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

30 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

35 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

50 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

1 hour ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago