தென்னிந்திய பிரபல நடிகையான திரிஷாவிற்கு விரைவில் திருமணம் ஆக போவதாக இவருக்கு நெருங்கியவட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையான திரிஷா, பிரசாந் நடித்த ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர், சூர்யா நடித்த மவுனம் பேசியதே படத்தின் மூலமாக கதாநாயகியாக திரைக்கு வந்தார். அவரது அயராத உழைப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது இவர் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை-2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் பொன்னியின் செல்வன் இறுதி கட்ட நடிப்பில் இவர் இருக்கிறார். மற்ற படங்களை நடித்து முடித்துவிட்ட நிலையில், புதுப்படங்களில் இதுவரை ஒப்பந்தம் செய்யாமல் இருந்து வருகிறார். இது குறித்து திரிஷாவிற்கு நெருக்கமானவர்கள், திரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதால் அவர் புதுப்படங்களை தவிர்ப்பதற்காக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் நடிகை திரிஷாவிற்கு 2015-ம் ஆண்டுபிரபல தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு , அது நிச்சயதார்த்தம் வரை சென்று ஐந்து மாதங்களுக்கு பின் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…