தென்னிந்திய பிரபல நடிகையான திரிஷாவிற்கு விரைவில் திருமணம் ஆக போவதாக இவருக்கு நெருங்கியவட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையான திரிஷா, பிரசாந் நடித்த ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர், சூர்யா நடித்த மவுனம் பேசியதே படத்தின் மூலமாக கதாநாயகியாக திரைக்கு வந்தார். அவரது அயராத உழைப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது இவர் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை-2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் பொன்னியின் செல்வன் இறுதி கட்ட நடிப்பில் இவர் இருக்கிறார். மற்ற படங்களை நடித்து முடித்துவிட்ட நிலையில், புதுப்படங்களில் இதுவரை ஒப்பந்தம் செய்யாமல் இருந்து வருகிறார். இது குறித்து திரிஷாவிற்கு நெருக்கமானவர்கள், திரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதால் அவர் புதுப்படங்களை தவிர்ப்பதற்காக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் நடிகை திரிஷாவிற்கு 2015-ம் ஆண்டுபிரபல தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு , அது நிச்சயதார்த்தம் வரை சென்று ஐந்து மாதங்களுக்கு பின் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…