டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நடிகை டாப்ஸியும் தனது ஆதரவை ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அண்மையில் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் பிரபல நடிகை டாப்ஸி பன்னு அவர்களும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை குலைக்குமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதத்தை குலைக்குமானால் உங்களது மதிப்பு முறையை வலுப்படுத்துவதற்காக நீங்கள் தான் பணியாற்ற வேண்டும் எனவும், நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சார ஆசிரியராக மாறக் கூடாது எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…