டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நடிகை டாப்ஸியும் தனது ஆதரவை ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அண்மையில் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் பிரபல நடிகை டாப்ஸி பன்னு அவர்களும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ட்வீட் உங்கள் ஒற்றுமையை குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை குலைக்குமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதத்தை குலைக்குமானால் உங்களது மதிப்பு முறையை வலுப்படுத்துவதற்காக நீங்கள் தான் பணியாற்ற வேண்டும் எனவும், நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சார ஆசிரியராக மாறக் கூடாது எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…