தனது மகனின் ஏழு வயது பிறந்தநாளன்று மகனுடன் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த நடிகை ரோஸ்மாண்ட் பிரவுன், கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அனைவருமே தங்களது நினைவுகள் ஒன்றும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக வித்தியாசம் வித்தியாசமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்து வைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சாதாரணமாக குழந்தை பிறப்பது முதல் தங்கள் குழந்தையின் வளரும் காளான் வரை உள்ள புகைப்படங்களை முந்தைய காலகட்டத்தில் எடுப்பார்கள். ஆனால், தற்போது கருவுற்ற ஒரு பெண்மணி தனது ஒவ்வொரு கர்ப்ப மாதத்திலும், புகைப்படங்கள் எடுப்பதும் தனது குழந்தை பிறந்த பின்பு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
அதிலும் அனைவரும் இப்பொழுது புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டதால் வித்தியாசமாக எடுக்க வேண்டுமென நடிகைகள் மற்றும் சில பிரபலங்கள் விரும்புவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. அதன்படி வித்தியாசமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக கானா நடிகை ரோஸ்மண்ட் பிரவுன் அவர்கள் தனது ஏழு வயது மகனுடன் அவனது பிறந்த நாளன்று நிர்வாணமாக இருந்து மகனுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
எனவே ஆபாசமான விஷயங்களை இடுகையிட்டது மற்றும் வீட்டு வன்முறை எனும் பிரிவிலும் நடிகை ரோஸ்மண்ட் அவர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அமெரிக்கர்கள் இது போன்று போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம் எனவும் ஆனால் இந்த புகைப்படத்துக்காக சிறை தண்டனை கொடுப்பது சற்று கடுமையானதாக தான் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…