நடிகை ரோஜாவுக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா ..!

Default Image

தமிழ் திரை உலகில் செம்பருத்தி எனும் படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரோஜா. அதன் பின்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் ரோஜா நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியாகவும் உள்ளார்.

இந்நிலையில், நடிகை ரோஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ரோஜாவுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் வருகிற மே மாதம் ஏழாம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பேசி உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இயக்குனர்கள், ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகை ரோஜா மிகவும் துணிச்சலான தமிழ்நாட்டின் மருமகள் என தெரிவித்துள்ளனர். மேலும் ரோஜாவுக்கு ஏழாம் தேதி திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்