நடிகை ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு!

Default Image
  • நடிகை ராஷ்மிகா வீட்டில் நடைபெற்ற ஐடி ரெயிடு.
  • வருமான வரித்துறை நேரில் ஆஜராக உத்தரவு. 

நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் பல ரசிகர்களை தன் வசம் கட்டி இழுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறாராம். இவர் தனது சம்பளத்தை கையில் பணமாக பேரருட் கொண்டு, முறையாக வரி கட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெயிடு நடைபெற்றது.

இந்த சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்