நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் சிலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டாலும் தற்போது எனக்கு கற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இன்னும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால், உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் சிறந்த ஆரோக்கியத்திற்காக தயவு செய்து உங்கள் விரைவாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமடைந்து மீண்டும் வருவேன் என்று நம்புகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…