நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டைட்டானிக் திரைப்படத்தை விரும்பி பார்ப்பதுண்டு. ஆங்கில படமான டைட்டானிக் படத்தில், நாயகியாக நடிகை கேட் வின்க்லெட்டும், நாயகானாக டிகாப்ரியோவும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 1997-ம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில், நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டைட்டானிக் திரைப்படம் எங்கு பார்த்தாலும் பரவி இருந்தது. அப்படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து, நான் இந்தியாவின் இமயமலை பகுதியில், முதுகில் பைகளை மாட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தேன்.
அப்போது 85 வயது மதிக்கத்தக்க முதியவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு கண் சரியாகத் தெரியவில்லை. என்னை பார்த்து அவர் “நீ டைட்டானிக்” என்று கூறினார். நான் ஆமாம் என்று தலையாட்டினேன். அவர் தனது கைகளை அவரது இதய பகுதியில் வைத்துக்கொண்டு நன்றி என்று சொன்னார். நான் உணர்ச்சிப் பெருக்கில் அழுதுவிட்டேன். அந்தப் படம் எவ்வளவு மக்களை என கொடுத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.’ என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…