மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து, கங்கானா ராணவத் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அவரது ட்வீட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 213 இடங்களை வென்றது. 77 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத், தனது ட்வீட்டர் பக்கத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து தொடர்ந்து விமர்சித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) வெற்றி பெற்றதையடுத்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், கங்கனா மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரினார். பாஜக வென்ற அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் இருந்து எந்த வன்முறையும் பதிவாகவில்லை. ஆனால் வங்காளத்தில் டி.எம்.சி வென்ற பிறகு ‘நூற்றுக்கணக்கான கொலைகள் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக விமர்சித்துள்ளார். கங்கானாவின் இந்த தொடர் நடவடிக்கையை தொடர்ந்து, அவரது ட்வீட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…