மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகை சாவி மித்தல் .. புகைப்படங்கள் உள்ளே..!

Published by
Rebekal

நடிகை சாவி மித்தல் அவர்கள் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்காக வேண்டுதல் செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு நேற்று மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்தவாறுள்ள தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ள சாவி தனது அனுபவத்தை கூறியுள்ளார். அதன்படி எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்று கூறியதில் இருந்தே ரசிகர்கள் பலரும் குணமடைவதாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவர்கள் பிரார்த்தனை இன்று பலன் கொடுத்துள்ளது போல் தெரிகிறது. மருத்துவர் மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்பாக நல்லதை பற்றி யோசிக்க சொன்ன பொழுது நான் எனது அழகிய மார்பகங்களை குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதன் பின்பு நான் எழுந்து பார்க்கும் பொழுது புற்றுநோய் இல்லாதவளாக எழுந்தேன். அறுவைசிகிச்சை ஆறு மணி நேரம் நடைபெற்றது. இது ஒரு பெரிய விஷயம். மேலும் என்னிடமிருந்து ஒரு மோசமான விஷயம் மறைந்து விட்டது என்று நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

உங்கள் பிரார்த்தனை எப்பொழுதும் ஆதரவாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சி. இன்னும் நான் சற்று வேதனையில் இருக்கிறேன். எனவே பிரார்த்தனையை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து எனக்காக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். மேலும் எனது அன்பான துணை இன்றி என்னால் இவ்வளவு சாதித்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

33 minutes ago

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

2 hours ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

3 hours ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

4 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

4 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

5 hours ago