PSBB பள்ளி மூடப்பட வேண்டும் என்றும்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் தூக்கிலிடப்படவேண்டும் என்றும் நடிகர் விஷால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்பவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.அதாவது,மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து,மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில்,இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”PSBB பள்ளி ஆசிரியரால் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது.பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் ஒருமுறை கூட மன்னிப்பு கேட்காத PSBB பள்ளி மூடப்பட வேண்டும்.இதுபோன்ற குற்றங்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
மேலும்,பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் தூக்கிலிடப்படவேண்டும்.அப்போதுதான்,எதிர்காலத்தில் மற்ற ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
எனவே,கடுமையான நடவடிக்கை எடுக்க எனது நண்பர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மஹேஷ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”,என்று பதிவிட்டிருந்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…