கட்டிடங்களை கட்டுவதில் குற்றம் செய்வதையே தனது பழக்கமாக கொண்டவர்தான் நடிகர் சோனு சூட் என மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு அரசியல்வதிகளும், தன்னார்வலர்களும் அரசாங்கமும் நிதி உதவிகளை மக்களுக்கு செய்து வந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே மக்களுக்கு உதவி வந்தனர். ஆனால் நடிகர் சோனு சூட் தற்பொழுது வரையிலும் தனது சொத்துக்களை கூட அடமானம் வைத்து பிறருக்கு உதவி வருகிறார். அண்மையில் 6 தளங்கள் கொண்ட தனது அடுக்குமாடி குடியிருப்பை சட்டத்துக்குப் புறம்பாக உரிமையின்றி உணவகம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் வணிக வளாகமாக மாற்றியிருந்தார்.
இது குறித்து மும்பை மாநகராட்சி நடிகர் சோனு சூட் மீது குற்றம் சாட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி தாக்கல் செய்துள்ள ஒரு பத்திரத்தில், 2018 ஆம் ஆண்டு சோனு சூட் கட்டிய ஒரு சட்டவிரோதமானது என இடித்த பின்பும் அவர் அந்த இடத்தில மறுபடியும், சட்டவிரோதமாக கட்டுமானங்களை மேற்கொண்டதாக கூறியுள்ளது. மேலும் உணவகம் வணிக வளாகங்களை பொது மக்கள் இருக்கும் இடத்தில வைக்க முறையான எந்த உரிமமும் பெறாமல் தனது அடுக்குமாடி குடியிருப்பை கொடுத்தது தவறு எனவும், கட்டுமான பணிகள் மற்றும் கட்டிடம் கட்டுவதில் குற்றம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர் சோனு சூட் எனவும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…