சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக நடிகர் ஷாம் உட்பட 13பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ் சினிமாவில் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாம். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாம் அவர்கள் தனது வீட்டில் சீட்டு விளையாடி சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ஷாம் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவருடன் 13பேர் சீட்டு விளையாடி கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வணிகர்கள், புதிய இயக்குநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…