இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரபாஷ். இதுவரை 2 பாகங்கள் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 3-வது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது நடிகர் பிரபாஷ் பாகுபலி 3-வது பாகம் குறித்து பேசியுள்ளார். அதாவது, பிரபாஷ், பூஜா ஹேக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய பிரபாஷ் ‘’ நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க எனக்கு ஆசை உள்ளது.. நான் அதிகமாக சம்பளம் வாங்குவதாக பேசுகிறார்கள். எனது படங்கள் 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறைதான் வெளியாகிறது.எனக்கு பொருத்தமான பெண் அமைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். பாகுபலி 3- பாகம் வருமா என பலர் என்னிடம் கேள்விகள் கேட்கின்றார்கள்.
பாகுபலி 3-ஆம் பாகத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதை தொடங்குவது இயக்குனர் ராஜமவுலி கையில் உள்ளது. எத்தனை படங்களில் நடித்தாலும் பாகுபலியை என்னால் மறக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…