தனது குழந்தையுடன் இணைந்து முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Default Image
  • தனது குழந்தையுடன் இணைந்து முளைப்பாரி எடுத்த நடிகர் கார்த்தி.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

நடிகர் கார்த்தி பல திரைப்படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவர், சினிமா துறையில் மட்டுமல்லாது, சில சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கிளாம்பாடியில் காளிங்கராயன் கால்வாய் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. ஊர் மக்களின்  அனைவரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று காளிங்கராயன் கால்வாயை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியும், அவரது மகளும் கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து முளைப்பாரி எடுத்துச் சென்று, காளிங்கராயன் கால்வாயில் முளைப்பாரியை விட்டு மரியாதை செலுத்தினார்.

கார்த்தி மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து முளைப்பாரி எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடம்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்