திருமணம் செய்வதாக கூறி நடிகையிடம் உல்லாசமாக இருந்து விட்டு மோசடி செய்த நடிகர் கைது.!

Default Image

முன்னணி நடிகையை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய பழகி விட்டு நடிகர் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.

சசிக்குமார் அவர்கள் நடித்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பெண்மணி ஒருவர் தனது காதலனான தியாகராஜன் என்பவரது மீது சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தென்காசியை சேர்ந்த நடிகை தியாகராஜன் என்ற நடிகரை சினிமா வாயிலாக பழக்கம் ஏற்பட்டதாகவும், 2011ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளார். தியாகராஜன் ‘திரிசுநிலம்’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த தியாகராஜனை நம்பி அந்த நடிகை ஒருவருக்கொருவர் நெருங்கி பழகியுள்ளனர். சமீபத்தில் தியாகராஜன் அவர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகவும், தன்னை சந்திக்க வரவில்லை என்றும், போன் அழைப்புகள் குறைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதோடு, அவரை மறக்கவில்லை என்றால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தததாகவும் கூறியுள்ளார். எனவே தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தி உள்ளார். அதன்படி விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் லூர்து மேரி, தியாகராஜனை கற்பழிப்பு, நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் தியாகராஜன் இவை அனைத்தையும் மறுத்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்