இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இந்த படத்தை தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் அதர்வா அடுத்ததாக தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
படத்திற்கான பூஜை கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…