தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக கர்ணன் படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக படத்தின் டைட்டில் கர்ணன் என்று வைக்க கூடாது என்று சிவாஜி ரசிகர்கள் கடந்த ஆண்டு கூறிவந்தார்கள். அதனை தொடர்ந்து கடந்த மாதம் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பட்ட சமூகத்தை சார்ந்தது என்பதால் படத்திலிருந்து பாடலை நீக்க கோரி வழக்கு தொடர பட்டது. இதனால் பண்டாரத்தி புராணம் பாடலை மஞ்சனத்தி புராணம் என்று படக்குழுவினர் மாற்றினார்கள்.
அதற்கு பிறகு இருந்து டீசர் மட்டுமே வெளியான நிலையில் டிரைலர் என் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், அதற்கான விளக்கம் தற்போது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆம், இது போன்று தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…