ஆயுர்வேத படி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும்.!

Published by
கெளதம்

பெண்களின் பாலூட்டும் சக்தியை இயற்கையாக அதிகரிக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில ஆரோக்கியமான உணவு பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை.

இந்நிலையில், கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம். குறைந்த பால் உற்பத்தியால் அவதிப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கடினம் எனில் அவர்களுக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில வழிகள் உதவியாக இருக்கலாம்.

Shatavari

சதாவரி:

அஸ்பாரகஸ் தாவரத்தின் ஒரு வகை தான் சதாவரி, இது ஆயுர்வேதத்தில் நன்கு அறியப்பட்ட மூலிகையாகும். பெண் இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக மாற்றுவது மட்டுமில்லமால் இந்த ஆயுர்வேத மூலிகை தாய்ப்பால் திறனையும் அதிகரிக்கிறது.

இஞ்சி மற்றும் பூண்டு:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலிருந்து பல நோய்களில் இருந்து காப்பாற்றுவது வரை இஞ்சி மற்றும் பூண்டு தங்களது பங்கை வகுக்கிறது. குழ்நதை பெற்ற தாய்மார்கள் பொதுவாக குழந்தை பிறந்த பிறகு முதல் மாதத்திற்கு இஞ்சி மற்றும் பூண்டு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். தாய்ப்பால் சீராக உற்பத்தி ஆக  இவை இரண்டும் அவசியமாக இருக்கிறது.

பெருஞ்சீரகம்:

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு பால் சுரப்பு சில சமயங்களில் குறைந்து விடும். தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள ‘அனீதோல்’ எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை மற்றொரு பிரபலமான மூலப்பொருள் ஆகும். போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு

இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் அந்த பாதம் பருப்புகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.

Published by
கெளதம்

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

6 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

6 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

7 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

7 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

9 hours ago