நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் நன்றி தெரிவித்தும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நடிகர்கள் என பலரும் இந்த கொரானா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அது போல இந்திய திரையுலகின் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை அனைவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் விரைவில் குணமாகி வீடு திரும்பிய நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அண்மையில் அமிதாப்பச்சனும் குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று அபிஷேக் பச்சனும் கொரோனாவை வென்றுள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இன்று பிற்பகல் எனக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்ற பதில் வந்துள்ளது. கொரோனாவை நான் வெல்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். எனக்காகவும் என்னுடைய குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி. மேலும் என்னை கவனித்துக் கொண்ட நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…