நடிகை பீரவீணா திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் வசித்து வரும் இவர் குழிகளை வளர்த்து வரும் கூட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்றை கண்டு பயந்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களிலும், சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரவீணா. இவர் மலையாளத்தில் இங்கிலீஷ் மீடியம், ஹஸ்பன்ட் இன் கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மேலும் பல மலையாள சீரியல்களிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்னும் தொடரிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு குரலும் பேசியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் வசித்து வரும் இவர் குழிகளை வளர்த்து வரும் கூட்டின் அருகே நல்ல பாம்பு ஒன்றை கண்டு பயந்துள்ளார். உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா பாம்பு பூங்கா நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தவுடன் ஊழியர்கள் விரைந்து வந்து பிறந்து 2நாட்களே ஆன நல்ல பாம்பை கண்டு பிடித்தனர். அதனையடுத்து அந்த ஊழியர்கள் பீரவீணாவின் கைகளில் பாம்பு குட்டியை கொடுக்க, முதலில் நடுக்கத்துடன் வாங்கிய பிரவீணா அதனையடுத்து பயமின்றி கொஞ்சினார். மேலும் பாம்புகளை கண்டதும் கொல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை எல்லாம் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…