‘ஆபாசமாக படம் பிடித்த மாணவன்’ காட்டி கொடுத்த போன்..!!

Default Image

ஃபிலிப்பைன்ஸில் நாட்டில் மாணவியை ஆபாசமாகப் படம் பிடித்த மாணவன், போனில் ஃப்ளாஷ் லைட் மின்னியதால் சிக்கிய  தப்பி ஓடும்  காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

படிக்கட்டில் குட்டைப் பாவாடை அணிந்து அமர்ந்திருந்த மாணவி ஒருவரைக் கண்ட மாணவன், அவருக்கு கீழ் படிக்கட்டில் அமர்ந்து செல்போன் பேசுவதைப் போல் பாவித்து, மாணவியை அநாகரீகமான முறையில் படம் பிடிக்க திட்டமிட்டான்.

தமக்குப் பின்னால்உட்கார்ந்து இருப்பவரால் படம்பிடிக்கப்படுகிறோம் என அறியாமல், கேமரா ஆப்-ஐ திறந்து காதருகே வைத்துக் கொண்டு, பேசுவதைப் போல் நடித்து, சரியான கோணம் கிடைக்க தலையைத் திருப்பிக் கொண்டிருந்த அவன், படம் எடுப்பதற்காக வால்யூம் பட்டனை அழுத்தினான். அப்போது  போனில் ஃபிலாஷ் லைட் மின்னியதை அடுத்து பதறிப்போன மாணவன்  அங்கிருந்து இடத்தைக் காலி செய்தான்.

பெண்கள் எப்போதும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என வலியுறுத்தி, அந்நாட்டின் சமூக வலைதளங்களில் தற்போது இக்காட்சிகள் வைரலாகப் பரவி வருகின்றன..

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்