எகிப்தின் சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல் என்ற கப்பல் சிக்கியது.
கடந்த வியாழக்கிழமை உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல்( coral crystal ) என்ற கப்பல் சூயஸ் கால்வாயின் இரட்டைப் பாதையில் சிக்கியது. அதன் பிறகு மற்ற கப்பல்கள் மற்ற பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோரல் கிரிஸ்டல் சிக்கியதால் அந்த பாதை தற்போதைக்கு மூடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தற்போது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பலை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோரல் கிரிஸ்டல் கப்பலில் 43,000 டன் எடை இருந்தது. இந்த கப்பல் போர்ட் சூடான் நோக்கி சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாயில் இதுபோன்ற கப்பல் சிக்கியது இது முதல் முறை அல்ல, இதுபோன்ற சம்பவம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சூயஸ் கால்வாயில் எவர் கிவன் என்ற மாபெரும் சரக்குக் கப்பல் சுமார் ஒரு வாரம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கோரல் கிரிஸ்டல் கப்பல்:
கோரல் கிரிஸ்டல் கப்பல் 2012 ஆம் ஆண்டில் சுமார் 225 மீட்டர் (738 அடி) நீளமும், 32 மீட்டருக்கும் (104 அடி) அகலமும் கொண்டது. இந்த பாதையில் இந்த கப்பல் பல முறை சூடான் சென்று வருகிறது. ஆனால் இந்த முறை கப்பல் சிக்கி கொண்டது.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…