எகிப்தின் சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல் என்ற கப்பல் சிக்கியது.
கடந்த வியாழக்கிழமை உலகின் பரபரப்பான நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாயில் கோரல் கிரிஸ்டல்( coral crystal ) என்ற கப்பல் சூயஸ் கால்வாயின் இரட்டைப் பாதையில் சிக்கியது. அதன் பிறகு மற்ற கப்பல்கள் மற்ற பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோரல் கிரிஸ்டல் சிக்கியதால் அந்த பாதை தற்போதைக்கு மூடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தற்போது சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள சரக்கு கப்பலை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோரல் கிரிஸ்டல் கப்பலில் 43,000 டன் எடை இருந்தது. இந்த கப்பல் போர்ட் சூடான் நோக்கி சென்று கொண்டிருந்தது. சூயஸ் கால்வாயில் இதுபோன்ற கப்பல் சிக்கியது இது முதல் முறை அல்ல, இதுபோன்ற சம்பவம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சூயஸ் கால்வாயில் எவர் கிவன் என்ற மாபெரும் சரக்குக் கப்பல் சுமார் ஒரு வாரம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கோரல் கிரிஸ்டல் கப்பல்:
கோரல் கிரிஸ்டல் கப்பல் 2012 ஆம் ஆண்டில் சுமார் 225 மீட்டர் (738 அடி) நீளமும், 32 மீட்டருக்கும் (104 அடி) அகலமும் கொண்டது. இந்த பாதையில் இந்த கப்பல் பல முறை சூடான் சென்று வருகிறது. ஆனால் இந்த முறை கப்பல் சிக்கி கொண்டது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…