பெரம்பலுார் : பெரம்பலுாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா அக்கட்சியின் தொண்டரை நாய் என்று திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து பெரம்பலுார் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு என்று பெரம்பலுார் காந்தி சிலை முன்பாக மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ராஜா ஏறியதும் கீழே மது போதையில் கட்சி கொடி மற்றும் பதாகைகளுடன் நின்றிருந்த ஒரு தொண்டர் ‘ராஜா வாழ்க வாழ்க’ என்று கோஷமிட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற ஆரம்பமானது. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேசினர். இதன் பின்னர் ராஜா பேசினார். அப்போது அதே தொண்டர் தொடர்ந்து ‘ராஜா வாழ்க’ என்று கோஷமிட்டார். இதனால் கோபமடைந்த ராஜா, ‘ஏய் அந்த நாயை வெளிய துாக்கிட்டு போங்கப்பா’ என கூறினார். பொது மேடையில் தொண்டரை நாயே என திட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…