வெளிய துாக்கிட்டு போங்க அந்த நாய-தொண்டரை பார்த்து ராஜா டெண்ஷன்

பெரம்பலுார் : பெரம்பலுாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா அக்கட்சியின் தொண்டரை நாய் என்று திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து பெரம்பலுார் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு என்று பெரம்பலுார் காந்தி சிலை முன்பாக மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ராஜா ஏறியதும் கீழே மது போதையில் கட்சி கொடி மற்றும் பதாகைகளுடன் நின்றிருந்த ஒரு தொண்டர் ‘ராஜா வாழ்க வாழ்க’ என்று கோஷமிட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற ஆரம்பமானது. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேசினர். இதன் பின்னர் ராஜா பேசினார். அப்போது அதே தொண்டர் தொடர்ந்து ‘ராஜா வாழ்க’ என்று கோஷமிட்டார். இதனால் கோபமடைந்த ராஜா, ‘ஏய் அந்த நாயை வெளிய துாக்கிட்டு போங்கப்பா’ என கூறினார். பொது மேடையில் தொண்டரை நாயே என திட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024