ராணுவ வீரரின் மார்பில் சிக்கிய கையெறி குண்டு.! உயிரை பணயம் வைத்து மீட்ட மருத்துவர்.!
உக்ரைன் ராணுவ வீரர் உடலில் சிக்கிய கையெறிகுண்டை ஒரு மருத்துவர் பாதுகாப்பாக அகற்றியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்க போகிறது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த போர்க்கலத்தில் ஒரு உக்ரைன் மருத்துவரின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
உக்ரைன் போரின்போது ராணுவ வீரர் ஒருவரின் மார்புகூட்டில் கையெறி வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடித்துவிடும் என்பதால் மற்ற மருத்துவர்கள் ஒதுங்கிய நிலையில், ஒரு மருத்துவர் தைரியமாக கையெறி குண்டை ஆபரேஷன் செய்து அகற்றினார்.
ஆபத்தான சூழலிலும் உயிரை பணயம் வைத்து ராணுவ வீரரை காப்பாற்றிய உக்ரைன் மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.