இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஒரு தரப்பு மக்கள்? என்ன காரணம்?

Published by
அகில் R

சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு பிரிவின மக்கள் ரைசியின் மரணத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக பதிவியிலிருந்து வந்த இப்ராஹிம் ரைசி, கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரின் உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும், ரைசியின் மறைவுக்கு ஈரான் அரசு 5 நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இவரது மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

இவரது மரணத்திற்கு அந்நாட்டு மக்களிலேயே ஒரு பிரிவினர் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எம்பிக்கள் பலரும் ரைசியின் மரணம் சரியான தண்டனை தான் என்கின்றனர். நீதித்துறையில் அதிபர் ரைசி பணியாற்றிய காலங்களில் அவர் வழங்கிய உத்தரவுகளும் தீர்ப்புகளும்தான் இப்போது ரைசியின் மரணத்தை மக்கள் கொண்டுடவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதாவது விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஈராக்குக்கு எதிராக ஈரான் யுத்த காலத்தில் ஈராக் நாட்டின் அதிபராக பணியாற்றிய சதாம் உசேன் ஆயுதங்களை வழங்கி ஈரானிலேயே ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கி உள்ளார். இதனால் ஈராக் மற்றும் ஈராக் ஆயுத குழு ஆகிய இருமுனை தாக்குதல்களை ஈரான் ராணுவம் சந்திக்க நேர்ந்தது. இந்த போர் முடிவடைந்த பிறகு ஈராக் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 2,000 பேர் முதல் 5,000 பேர் வரை கைது ஈரான் நாட்டால் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் நிலைமையை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும் இரான் நாட்டிலிருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமலே இருந்தனர். மேலும், 5,000 பேருக்கும் ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றி படுகொலை செய்தனர்.

இந்த மரண தண்டனைக்கு உத்தரவிட்டவரே அப்போது நீதித்துறையில் முக்கிய பதவியில் இருந்த இப்ராஹிம் ரைசி தான் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். இதன் காரணமாக தான் அங்குள்ள ஒரு தரப்பு மக்கள் அவருக்கு கிடைத்த இந்த மரணம் சரியானது தான் என கூறி மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

15 minutes ago
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

32 minutes ago
MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

MIvsRCB : பும்ரா பந்துவீச்சை சமாளிப்பாரா கிங் கோலி? இதுவரை இத்தனை முறை அவுட்டா?

மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…

51 minutes ago

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

2 hours ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

2 hours ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

3 hours ago