அதிர்ச்சி சம்பவம்…மைதனாத்தில் புதைக்கபட்ட குண்டு வெடிப்பு – 12 பேர் பலி!

Published by
Edison

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி:

அதனை உறுதி செய்யும் வகையில்,ஹெராட் நகரின் PD 12 இல் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, 25 பேர் காயமடைந்தனர் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும்,காயமடைந்தவர்கள் மாகாண தலைநகர் ஹெராட்டில் உள்ள பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மைதானத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டு:

மேலும்,வெடிபொருட்கள் விளையாட்டு மைதானத்தில் முன்னதாக புதைக்கப்பட்டிருந்ததாகவும்,அந்த மைதனாத்தில் இளைஞர்கள் விளையாடியதால் குண்டு வெடித்துள்ளதாகவும் TOLO செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தலிபான்கள் – மோசமான தாக்குதல்கள் :

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதில் இருந்து, நாடு முழுவதும் தொடர்ந்து மோசமான தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.அந்த வகையில்,இதற்கு முன்னதாக, ஜனவரி மாதம்,ஹெராட் நகரில் நடந்த வெடி விபத்தில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில்,ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் குண்டி வெடிப்பு நிகழ்ந்துள்ளது.அதன்படி,இறந்தவர்களில் குறைந்தது நான்கு பெண்களும் அடங்குவர் என கூறப்படுகிறது.

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

12 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

14 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

15 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

17 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

17 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

18 hours ago