கண்ண மூடுனது ஒரு குத்தமா..! வைரலான அதிபர் வீடியோ..!

Published by
Castro Murugan

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது உக்ரைன் விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் மைதானத்திற்குள் நுழைந்தபோது ரஷ்ய அதிபர் புடின் தூங்கினார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 30 நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் 94 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பெய்ஜிங்கில் உள்ள பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில்  குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாடுகளும் அவரவர் நாட்டின் கொடி மற்றும் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புடின் கலந்துகொண்டார். இந்நிலையில்,  உக்ரைன் விளையாட்டு வீரர்கள் குழு ஒன்று மைதானத்தில் நுழைந்தபோது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தூங்கிவிட்டார் என கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது. இதைப்பார்த்த பலர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது இடத்தில் அமர்ந்து தூங்கிவிட்டாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தை பார்க்கும்போது அவரது கண்கள் மூடிய நிலையில் காணப்படுகின்றன. எனினும், அப்போது விளாடிமிர் புடின் தூங்கினாரா..? என்பது உறுதி செய்யப்படவில்லை.  அதேநேரத்தில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி குழு பெய்ஜிங்கின் தேசிய மைதானத்திற்குள் நுழைந்த நேரத்தில், புடினின் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் 2019 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியாக போட்டியிடுகின்றனர். அதாவது விளையாட்டுகளின் போது விளையாட்டு வீரர்கள் தங்கள் கொடி அல்லது தேசிய கீதத்தை பயன்படுத்த முடியாது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படை வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து வருகிறது.

 உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், நெருங்கிய நட்பு நாடான சீனாவின் அதிபர் ஜின்பிங்கை புதின் நேரில் சந்தித்தது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

4 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

5 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

6 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

8 hours ago