கால் வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற 25 வயது பெண்..!பரிசோதனையில் ஆண்..!

Published by
Edison

சீனாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர்,கணுக்கால் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். ஆனால்,பரிசோதனை முடிவில் ஆண் என தெரிய வந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

சீனாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர்,திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேலாக,தான் கர்ப்பம் தரிக்க முடியாமல் இருந்துள்ளார். இதற்கிடையில்,கணுக்கால் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.ஆனால்,அதன்பின்னர் வந்த மருத்துவப் பரிசோதனை முடிவில்,உடலுக்குள் ஆண்களுக்குரிய செல் பண்புகள் இருப்பதாக தெரிய வந்ததைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து,அந்த 25 வயது பெண் மருத்துவரிடம் கூறுகையில்,”எனக்கு கணுக்காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்தேன்.ஆனால்,பரிசோதனை முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இருப்பினும்,நான் மற்றவர்களை விட மெதுவாக வளர்ச்சியடைந்ததன் காரணமாகவும் மற்றும் எனக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்ததாலும் சிறுவயதில் என் அம்மா என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார்.அப்போது,இந்த பிரச்சனை வளர வளர சரியாகிவிடுமென்று மருத்துவர் தெரிவித்தார்.ஆனால்,தற்போது வரை எனக்கு மாதவிடாய் வரவில்லை.எனினும்,இதை யாரிடமும் நான் கூறியதில்லை”,என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,சீன மருத்துவர் டோங் ஃபெங்கின் கூறுகையில்,”சில நபர்களை பாதிக்கும் ‘இன்டர்செக்ஸ்’ என்ற ஒரு அரிய வகை நோயானது, உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.அதாவது,உடலளவில் பெண்ணாக பிறந்தபோதிலும்,உயிரளவில் ஆணாக (ஒய் குரோமோசோமும்) இருப்பதால் உடலில் கருப்பை இல்லை.அதனால்,உங்களால் கருத்தரிக்க முடியாது.

மேலும்,பெண்களுக்கு இளம் வயதில் உடலுக்குள் உருவாகும் எலும்புகளும் உங்களுக்கு உருவாகவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிகிறது.எனவே, இனி ஆணாக இருக்கவேண்டுமா? அல்லது பெண்ணாக இருக்க வேண்டுமா? என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்”,என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

13 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

33 minutes ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

50 minutes ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

1 hour ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

1 hour ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago