#Coronavirus கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா 908 பேர் பலி , 40,171 பேர் பாதிப்பு

Default Image

சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை  ஞாயிற்றுக்கிழமை  908 ஆக உயர்ந்ததுள்ளது ,நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,171 எட்டியுள்ளது . புதியதாக 3,062 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பபு ( WHO ) கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு 675 மில்லியன் டாலர்கள் நிதி தேவை என்றும் இதற்க்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அறிவித்தது . இதற்க்கு பில்கேட்ஸ்  மற்றும்  அமெரிக்கா தலா 100 மில்லியன் டாலர்கள் தருவதாக அறிவித்துள்ளனர் .

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸின் எண்ணிக்கையை மிஞ்சி சென்றுகொண்டிருக்கிறது . உலக சுகாதார அமைப்பு (WHO) இது  குறித்து விசாரிக்க ஒரு குழுவை சீனாவிற்கு  அனுப்பியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்