சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி..!

Default Image

சீனாவில் ரயில்வே ஊழியர்கள் 9 பேர் மீது ரயில் மோதியதில், 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை ஜின்சங்கில் உள்ள ரயில்வே ஊழியர்களின் மீது பயணியர் ரயில் ஒன்று மோதியுள்ளது. இதில் 9 ரயில்வே கட்டுமான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த ரயில் ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரிலிருந்து ஜெயியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்கோ நகருக்கு சென்றுள்ளது. இந்த விபத்து குறித்த காரணம் வெளியாகாத நிலையில் இந்த சம்பத்தை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்