நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு.!

Published by
murugan

வடகிழக்கு சீன மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் ஒரு வருடமாக பிரீசரில் (freezer) வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் சூப்பை சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 5 ஆம் தேதி காலையில் ஒரே குடும்பத்தை சார்ந்த 12 பேர் காலை உணவாக புளித்த சோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட அடர்த்தியான நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தனர்.

அவர்களில் ஏழு பேர் அக்டோபர் 10-ம் தேதி இறந்ததாகவும், எட்டாவது மரணம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவும், கடைசியாக உயிரிழந்தவர் கடந்த திங்கள்கிழமை இறந்தார் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன சுகாதார ஆணையம் திங்களன்று ஒரு தேசிய எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப் நூடுல்ஸ் ஒரு வருடமாக பிரீசரில் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்ததால் அதை சாப்பிடுவதற்கு முன்பு மோசமாகிவிட்டது.

அதை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளனர். புளித்த மாவில் இருந்து உணவு தயாரிப்பதை அல்லது சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியது.

புளித்த மாவு மற்றும் அரிசி பொருட்களிலிருந்து போங்க்கிரெக்கி என்ற நச்சு அமிலம் உருவாகும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, நன்கு சமைத்தாலும் அதை அகற்ற முடியாது என்று சீனாவின் வேளாண் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஃபேன் ஜிஹோங் தெரிவித்தார்.

போங்க்ரெக்கிக் அமிலத்தால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: noodles

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

42 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

1 hour ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

1 hour ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

2 hours ago