இந்திய புரோ கபடி லீக் : பரிசுத் தொகை ரூ.8 கோடி அறிவிப்பு

Default Image

டெல்லி : 5-ஆவது சீசன் புரோ கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ. 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.2 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர மதிப்புமிக்க வீரர் விருதை வெல்பவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது. 5-ஆவது சீசனில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 4 அணிகள் முதல்முறையாக களமிறங்குகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் 28-ஆம் தேதி புரோ கபடி லீக் தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸூம், தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்