மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றோருக்கு 85% உள் இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு இன்னும் சில நாள்கள உள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அவசர முடிவெடுக்கும் கட்டாயத்தில் உள்ளது .