அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு ஊசி ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான நீரிழிவு நோயாளிக்கு முதன்முறையாக போடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு கொண்டு இருந்ததை அடுத்து தற்போது சில தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக அளவில் முதன்முறையாக பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான பிரையன் பிங்கர் நீரிழிவு நோயாளிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் முதல் கட்டமாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதல் டோஸ் போட்டுக் கொள்ள இருக்கிறார்கள். வரும் சில மாதங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்து பத்து லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…