ஒரேநாளில் 81 பேருக்கு தூக்கு தண்டனை..! எங்கு தெரியுமா..?

Default Image

உலக நாடுகள் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக, குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் அனைவரும் கொடூரமான குற்றங்கள் செய்தவர்கள் என சவுதி அரேபியா சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மரண தண்டனை பெற்றவர்களில் பயங்கிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா, யேமனின் ஹீதி கிளர்ச்சிப் படைகள் தொடர்புடையவர்களும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களுக்கும் உள்ளனர்.

இந்த நிலையில், தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஏழு பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் சிரியா நாட்டை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்