பெருவில் 800 ஆண்டுகள் பழமையான மம்மி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடான பெரு நாட்டில் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை நிலத்தடி கல்லறையிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மம்மி லிமா என்னும் நகரின் புற நகரில் உள்ள நிலத்தடி கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மம்மியின் பாலினம் என்ன என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சான் மார்கோஸ் மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வான் டேலன் லூனா என்பவர் இது குறித்து கூறுகையில், மம்மியின் முக்கிய குணாதிசயம் என்னவென்றால் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப்பட்டு, கைகளால் முகத்தை மூடியபடி இருக்கும். எனவே, இது மிக முந்தைய காலகட்டத்தில் உள்ள ஆண்டில் வாழ்ந்த ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தென் ஆப்பிரிக்க நாட்டின் கடற்கரைக்கு மலைக்கும் இடையே வளர்ந்த கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவரின் உடலாக இது இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…