பெருவில் 800 ஆண்டுகள் பழமையான மம்மி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடான பெரு நாட்டில் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை நிலத்தடி கல்லறையிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மம்மி லிமா என்னும் நகரின் புற நகரில் உள்ள நிலத்தடி கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மம்மியின் பாலினம் என்ன என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சான் மார்கோஸ் மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வான் டேலன் லூனா என்பவர் இது குறித்து கூறுகையில், மம்மியின் முக்கிய குணாதிசயம் என்னவென்றால் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப்பட்டு, கைகளால் முகத்தை மூடியபடி இருக்கும். எனவே, இது மிக முந்தைய காலகட்டத்தில் உள்ள ஆண்டில் வாழ்ந்த ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தென் ஆப்பிரிக்க நாட்டின் கடற்கரைக்கு மலைக்கும் இடையே வளர்ந்த கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவரின் உடலாக இது இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…