துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி! குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!

Default Image

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணின் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்.

கடந்த செவ்வாய்கிழமை சிகாகோ நகரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 35 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர்.

 இந்நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன்  காப்பாறறியுள்ளார். இந்த செயலானது, சோகத்திலும் ஆறுதலாய் அமைந்தது. அப்பெண் எதற்காக சுடப்பட்டார்? யாரால் சுடப்பட்டார்? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிற நிலையில், 8 மாத குழந்தை, சிகாகோவில் உள்ள காமர் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்