அமெரிக்காவில் 8 இந்தியாயர்கள் கைது…!!

Default Image

அமெரிக்கா நாட்டில்  3 ஆண்டுகள் தங்கி வேலை செய்வோருக்கு எச்-1 பி’ விசா வழங்கப்பட்டு வந்தது.அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணியில் நியமிக்கின்றனர். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அமெரிக்க 65ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது.கடந்த ஆண்டு இந்த விசாக்கள் வழங்காமல் திடீரென நிறுத்தியது.

இந்நிலையில் அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ‘எப் 1’ விசா பெறும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலேயே பணிபுரிவதற்காக பணி விசாவும் வழங்கப்படுகின்றது. இதையடுத்து அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் பதிவு செய்தனர்.ஆனால் பார்மிங்டன் பல்கலைக்கழகம், விசா மோசடிகளையும், குடியேற்ற விதி மீறல் என பல்வேறு போலியான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது . இந்நிலையில் போலியான பல்கலைகழகத்தில் சட்ட விரோதமாக மாணவர்களை சேர்த்ததாக இந்தியர்கள் 8 பேரை அமெரிக்கா கைது செய்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்