உகாண்டாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் சொத்தாக 75 வயது ராட்சத முதலை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உகாண்டா நாட்டில் இருக்கும் விக்டோரியா ஏரியில் 16 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்து வந்தது. மேலும் இந்த முதலை 1991 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அங்கிருக்கும் லூகானா கிராமத்தை சேர்ந்த மக்களை கொன்று தின்றுள்ளது. இந்த ராட்சத முதலைக்கு 80 மக்கள் பலியாகியுள்ளனர். அதனால் இந்த முதலையை அங்கு வசிக்கும் மக்கள் ஒசாமா பின்லேடன் என்று பெயர் வைத்துள்ளனர்.
முதலையால் மக்கள் பலர் கொல்லப்படுவதால் இதற்கு முடிவு கட்ட எண்ணி 2005 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வார காலமாக வனத்துறை அதிகாரிகளும், அங்கு வசிக்கும் 50 மக்களும் சேர்ந்து இந்த முதலையை பிடித்துள்ளனர். ஒசாமா முதலை பின்னர் வனத்துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
75 வயதான முதலையை உகாண்டாவின் ‘க்ரோக்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் அதனது சொத்தாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் முதலையின் தோலின் மூலமாக கைப்பைகள் தயாரிக்கிறது. இந்த கைப்பைகளை தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் காரணத்தால் இந்த ஒசாமா பின்லேடன் என்ற முதலை அந்த நிறுவனத்தின் சொத்தாக மாறியுள்ளது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…