ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் உயிரிழப்பு

Default Image

ஆப்கானிஸ்தானில்  அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில்  தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ படைகள் தலிபான்களை ஒழிக்க ஆப்கான் படைகளுக்கு  ஆதரவு அளித்து வருகிறது.தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் அதனை முடிவு கொண்டு வரும் விதமாக தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஆப்கான் அரசின் உதவியோடு  ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி மற்ற நாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என்று தலிபான்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விமானப்படையினர் நேற்று லோஹர் மாகாணம் புல்-இ-ஆலம் பகுதியில் தலிபான் இருக்கும் இடங்களை நோக்கி தாக்குதல் நடத்தினர்.இதில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக   அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்