24 மணி நேரத்தில் 69 பேர் உயிரிழப்பு.! கவலைக்கிடமாக 4,800 பேர் மருத்துவமனையில்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது.

சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹூபே சுகாதார மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் கொரோனா வைரஸால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 3143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24 மணி நேரத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் சீன மக்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் 31 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 3 பெரும் சீனாவில் ஹூபே மாகாணத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவில் பல நகரங்களில் ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாணம் கடந்த இரு வாரங்களாக பூட்டப்பட்ட நிலையில் தான் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஹூபே மாகாணதின் தலைநகர் வுஹானில் தான் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

14 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

27 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

43 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

46 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

53 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

57 mins ago