இரண்டு சட்டைகளை திருடியதற்காக 20 வருடம் சிறைவாசம் அனுபவித்த 67 வயது முதியவர்!

Published by
Rebekal

500 டாலர்களுக்கும் குறைவான 2 சட்டைகளை திருடிய குற்றத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த கருப்பின முதியவர் 20 ஆண்டுகளுக்குப் பின்பு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் தான் கெய் பிராங்க். இவருக்கு தற்போது வயது 67 ஆகிறது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 500 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள இரண்டு சட்டைகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றத்திற்காக இவருக்கு மிகப் பெரும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு நீதிபதிகள் 23 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை தீர்ப்பு அளித்துள்ளனர். ஆனால் இவர் கருப்பினத்தவர் என்பதால் இவருக்கு கடுமையான தண்டனை வழங்கி உள்ளதாக, சில நிறுவனங்கள் இவருக்காக வாதாடி உள்ளனர்.

எனவே இவரது தண்டனை 3 ஆண்டுகள் மட்டும் குறைக்கப்பட்டு 20 ஆண்டுகள் இவர் சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் பொழுது இவரது மனைவி, மகன் மற்றும் இரண்டு சகோதரர்கள் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள முதியவர் கெய் பிராங்க் அவர்களுக்காக பலரும் சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து வருவதுடன், “கோ பண்ட் மீ” எனும் பக்கத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago